×

மாநகராட்சி பள்ளிக்கு 11 கண்காணிப்பு கேமரா

புழல், ஏப்.20: புழலில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு 11 கண்காணிப்பு ேகமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் பல்வேறு உதவிகள் செய்யக்கோரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி மாதவரம் வடக்கு பகுதி திமுக பிரதிநிதியும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான புழல் சிவகுமாருக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிவக்குமார் மற்றும் புழல் நட்பு வட்டார நிர்வாகிகள் குணாநிதி, ராஜ்குமார், அருணாசலம் ஆகியோர் ஏற்பாட்டில் 70 ஆயிரம் மதிப்பிலான 11 கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியில் பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா பள்ளித் தலைமையாசிரியர் ஜான்சிராணி தலைமையில் நடந்தது. இதில் மாதவரம் மண்டல குழு தலைவர் மாதவரம் எஸ்.நந்தகோபால் கண்காணிப்பு கேமராவை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, மாநகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி பவித்ரா தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றதை பாராட்டி ₹5 ஆயிரத்துக்கு காசோலை வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஆசிரியைகளுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார். இதில் புழல் 23வது வட்ட துணைச் செயலாளர் விக்னேஸ்வரன், பிரதிநிதி நெல்சன், எஸ்.கே.ராஜேந்திரன், என்.சரவணன், யுவராஜ், புகழேந்தி, கோபால், பாலா, தேவா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், புழல் நட்பு வட்டார நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி பள்ளிக்கு 11 கண்காணிப்பு கேமரா appeared first on Dinakaran.

Tags : Puzhal ,School ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!